Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணி மண்டபம் அருகே மத்திய அரசு கொண்டு வரும் தேசிய கல்வி கொள்கை திட்ட வரைவை பொதுமக்களுக்கும் மாநில உரிமைக்கும் சமூகநீதிக் கொள்கைக்கும் எதிரானவை, இதனை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணி மாநில செயலாளர் கபிலன் தலைமை தாங்கினார். ஏகவள்ளி, அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் பாவாணன் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
கடற்கரை சாலையில் இருந்து துவங்கி மரப்பாலம் வழியாக புதுச்சேரி முழுவதும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.